24 வரை இலங்கையை கதகலங்க வைக்க போகும் அடை மழை-சற்று முன் வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு தெற்காக தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி குறிப்பாக மாலைதீவுகள்/ குமரிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என  என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர்,  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்

எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வாய்ப்புள்ளது. 


இது இலங்கையின் கிழக்கு கரையோரமாக, வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதி வடக்கு மாகாணத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 24 திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. 


கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் கன மழை 23 திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. 


வடக்கு மாகாணத்திலும் நாளை (19) மழை சற்று குறைவடைந்தாலும் மீளவும் நாளை மறுதினம் சற்றுக் கனமழை கிடைக்க தொடங்கும். 


குறிப்பாக 21 மற்றும் 22 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 

கிழக்கு மாகாணத்தோடு ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்திற்கு குறைவான மழையே கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் இம்மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழையாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. 


கிழக்கு மாகாண மக்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 23 வரையான திரட்டிய மழை வீழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சாத்தியமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது மிக அவசியம். 

உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எதிர்வரும் 20 முதல் 24 வரை வடக்கு, கிழக்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.


எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இந்தப் பகுதிகளில் இந்த நாட்களில் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் மிக  அவதானமாக இருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.









































































































































































































 













































 



 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.