அயல் வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பெண்ணை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
