சற்று முன் நாட்டு மக்களுக்கு பொலிசார் அவசர அறிவிப்பு

 சமூக வலைத்தளங்களில் பொலிஸாரின் பெயரில் பரப்பப்படும் போலியான அறிவிப்புகள் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'பொலிஸ் அறிவித்தல்' (Police Notice) என்ற பெயரில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உள்ளடக்கி பகிரப்படும் இச்செய்தி, பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது அல்ல என்றும், அது ஒரு போலியான தகவல் என்றும் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், வாசகங்கள் மற்றும் வழிகாட்டல்கள் அங்கீகரிக்கப்படாதவை மற்றும் பொதுமக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டவை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை | Sri Lanka Police Warn The Public To Be Vigilant

எனவே, அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.