கொழும்பு - கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று -9- காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 26 இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள், கோடிக்கணக்கானசொத்துக்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.
