முல்லைத்தீவில் ஆட்டோவில் பயணித்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-திடீரென நடந்த தாக்குதல்{படங்கள்}

 

முல்லைத்தீவில் யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று இரவு 09-01-2026 யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யானைத்தாக்குதலில் படுகாயமடைந்தவர் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் யானைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்த போதும் முச்சக்கரவண்டி சாரதியான வவுனியா சிறிநகர் பகுதியை சேர்ந்த ம.பாஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென குறுக்காக வந்து யானை தாக்குதலை நடத்தியதன் காரணமாக முச்சக்கரவண்டி தடம் புரண்டு விபத்துக்குளாகியதுடன் பலத்த சேதமடைந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.





கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.