இனி இதை செய்தால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்-வெளியான அதிர்ச்சி காரணம்

 

பெற்​றோரை கைவிட்​டால் மாநில அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் 10 முதல் 15 சதவீதம் வரை அறவிட்டு, அது அவர்​களின் பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும் என இந்தியாவின் தெலங்​கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்​துள்​ளார். 

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் நேற்று (12) ‘பால பரோ​சா’ மற்​றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு 50 கோடி ரூபா மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். 

இதன் போது கருத்து தெரிவித்த அவர், 

பிரணய் திட்​டம் மூலம் முதி​யோரை நல்ல வழி​யில் பாது​காக்க இந்த அரசு தீர்​மானித்​துள்​ளது. இதனால் இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, அனாதை இல்​லங்​களில் சேர்த்​தாலோ, கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதா​மாதம் அறவிட்டு, அப்​பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும். பெற்​றோரை கைவிடு​பவர்​களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்​டும். பெற்​றோருக்கு உபயோகப்​படா விட்​டால், அவர்​கள் இந்த சமூகத்​துக்கு எப்​படி உபயோகப்​படு​வார்​கள் என தெரிவித்தார்

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.