வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தின் உளுந்து வடையில் கரப்பான் பூச்சி!
உளுந்து வடையை வாங்கிய பாவனையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார் "நாங்கள் இன்று வெள்ளவத்தையில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உளுந்து வடை வாங்கினோம். என் அம்மா அதை ஒரு கடி கடித்தார்.... அந்த வடைக்குள் ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது.
வெறும் கால் அல்லது இறக்கை அல்ல. ஒரு முழு கரப்பான் பூச்சி!
இது ஒரு சிறிய தவறு கிடையாது. இது சுத்தமில்லாத, மிகவும் மோசமான தரம். மக்கள் உங்களை நம்பி உணவு வாங்குகிறார்கள், நீங்கள் இதைத்தான் பரிமாறுகிறீர்களா?
இது ஒருவரை கடுமையாக நோய்வாய்ப்படுத்தியிருக்கக்கூடும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என யார் வேண்டுமானாலும் இதைச் சாப்பிட்டிருக்கலாம்.
நிச்சயமாக அருவருப்பானது மற்றும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு கடியிலேயே இதைக் கண்டுபிடித்தோம் என்றால், மக்கள் கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் என்னென்ன இருக்கிறதோ? மற்றவர்கள் எங்களைப் போல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன்" என அவர் பகிரந்துள்ளார்.
இது சம்பந்தமாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
