கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக நேற்று சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறு சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், இவ்வாறான தாக்கங்களை செலுத்தியுள்ளது.
நேற்று மாலை நேரம் திருகோணமலையில் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.
