வவுனியா - நெளுக்குளம் பகுதியில் இ.போ.சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனார்.
வவுனியா- மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா நோக்கி வந்த இ.போ.சபை பேருந்தும் அதே திசையில் பின்னால் வந்த தனியார் பேருந்தும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இரு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
