வாகன இறக்குமதியில் ஏற்படபோகும் அதிரடி மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

 இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு இலங்கை வாகன இறக்குமதிக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் | Srilanka Vehicle Import

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு அதிக அளவு வாகன இறக்குமதிகள் ஏற்பட்டதால் இந்த ஆண்டு வாகன இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் வாகன இறக்குமதிக்காக கணிசமான தொகை செலவிடப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

பெப்ரவரியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு நாட்டிற்கு 3,60,117 வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் சூறாவளி டித்வா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு இலங்கை 4 முதல் 5 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று மத்திய வங்கி கணித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.