வயல் காவலில் பெரும் துயரம்: காட்டு யானை தாக்கி 19 வயது இளைஞன் உயிரிழப்பு
முல்லைத்தீவு பகுதியில் விவசாயத்திற்காக சென்ற இளம் உயிர், எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பகுதியை கண்ணீர் மலரச் செய்துள்ளது.
முல்லைத்தீவு - தேறாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க பொன்முடி சுயந்தன், இன்று (17.01.2026) அதிகாலை 03:30 மணியளவில் தனது வயல் காவலில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானையின் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், வயல் காவல் மற்றும் இரவு நேர பயணங்களில் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இளைஞரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
