பதுரலிய - களுகல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுகல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
