ஆசிரியர்களின் சம்பளமற்ற விடுமுறை-முழுமையான தகவல்..!

 

சம்பளமற்ற விடுப்பு (No-Pay Leave)  ஆசிரியர்களுக்கானது.

அரச சேவையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு “சம்பளமற்ற விடுப்பு” என்றால் என்ன?

எந்த காரணங்களுக்காக அது வழங்கப்படும்? எந்த விதிமுறைகள் பொருந்தும்?

என்பதை கீழே தாபனவிதிக்கோவை (Establishment Code) மற்றும் பொது நிர்வாகச் சுற்றறிக்கைகள் அடிப்படையில்.

01. சம்பளமற்ற விடுப்பு (No-Pay Leave) என்றால் என்ன?

1. அரசு ஊழியர் ஒருவர் சம்பளம் பெறாது தற்காலிகமாக பணியில் இருந்து விலக அனுமதி பெறுவது சம்பளமற்ற விடுப்பு எனப்படுகிறது.(தாலானவிதிக்கோவை XII.22)

02. எந்த காரணங்களுக்காக சம்பளமற்ற விடுப்பு பெறலாம்?

1. மிக அவசரமான சொந்த சிகிச்சை, குடும்ப சிகிச்சை, வெளிநாட்டு சிகிச்சை, கல்வி / பயிற்சி அல்லது பிற தனிப்பட்ட அவசர தேவைகள் போன்ற காரணங்களுக்காக சம்பளமற்ற விடுப்பு பெறலாம்.(தாலானவிதிக்கோவை XII.22:1, XII.9:2:1)

03. சொந்த சிகிச்சைக்காக எவ்வளவு காலம் வரை சம்பளமற்ற விடுப்பு பெறலாம்?

1. அரச மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 3 மாதங்கள் வரை பெறலாம்.(தாலானவிதிக்கோவை XII.22:1)

04. குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்காக சம்பளமற்ற விடுப்பு கிடைக்குமா?

1. ஆம். துணைவர் அல்லது குழந்தை போன்ற நெருங்கிய உறவினரின் தீவிர சிகிச்சைக்காக சம்பளமற்ற விடுப்பு வழங்கப்படலாம்.(பொ.நி.சுற்றறிக்கை 11/2013)

06. வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு சம்பளமற்ற விடுப்பு கிடைக்குமா?

1. ஆம். அரச அனுமதி பெற்ற பின் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்காக சம்பளமற்ற விடுப்பு வழங்கப்படும்.(தாலானவிதிக்கோவை XII.22:1:1)

07. கல்வி அல்லது பயிற்சிக்காக சம்பளமற்ற விடுப்பு பெற முடியுமா?

1. ஆம். அரச அனுமதி அடிப்படையில் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சம்பளமற்ற விடுப்பு வழங்கப்படும்.(தாலானவிதிக்கோவை XII.9:2:1)

07. மகப்பேறின்மை (Infertility) சிகிச்சைக்காக சம்பளமற்ற விடுப்பு வழங்கப்படுமா?

1. ஆம். இதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் நிர்வாக அனுமதி அடிப்படையில் வழங்கப்படும்.(பொ.நி.சுற்றறிக்கை 07/2017)

08. சம்பளமற்ற விடுப்பு வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

1. சம்பளமற்ற விடுப்பு வழங்குவது சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரியின் அனுமதியுடன் மட்டுமே நடைமுறைக்கு வரும்.(தாலானவிதிக்கோவை XII.22)

09. சம்பளமற்ற விடுப்பு சேவைத் தொடர்ச்சிக்கு சேருமா?

1. பொதுவாக சேராது. அதனால் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கணக்கில் இந்தக் காலம் சேராது.(தாலானவிதிக்கோவை XII.15)

01. சம்பளமற்ற விடுப்புகள் அதிகார அனுமதியுடன் மட்டுமே செல்லுபடியாகும்.

02. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்படும்.

03. இந்த பதிவு வழிகாட்டல் நோக்கத்திற்காக மட்டுமே; நிர்வாகத் தீர்மானம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

ஆதாரங்கள்.

01. தாலானவிதிக்கோவை (Establishment Code): XII.22, XII.9:2:1, XII.15

02. பொது நிர்வாகச் சுற்றறிக்கைகள்: 11/2013, 07/2017


கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.