ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தோர் மீது முறிந்து விழுந்த மரக்கிளை ஒருவர் உயிரிழப்பு
பலாங்கொடை - கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பலாங்கொடை - கல்தோட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
படம் Ai
