மிஹிந்தலை - புதுக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (25) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
