முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு கூட்டம் அண்மையில் இடம்பெற்று முடிந்தது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரலாற்றில் முதன்முறையாக பிரதேச சபையை கைப்பற்றியது.
இது அநுர அரசாங்கத்திற்கு வடக்கில் கிடைத்த முதல் வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது.
தமிழர் பகுதியில் இடம்பெற்ற குறித்த பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியில் உள்ளக பிரச்சினைகள் காரணமாக தோல்வியை அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
