SaReGaMaPa: யார் அந்த 4வது இறுதி போட்டியாளர்? – சரிகமப 'One & One' சுற்றில் பரபரப்பு! நடுவர்கள் சொன்ன வார்த்தை!

 

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இசை நிகழ்ச்சி 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5, தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. யார் அடுத்த இறுதி போட்டியாளராக தேர்வாக போகிறார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே தொடர்ச்சியான சவால்கள் மற்றும் திறனை நிரூபிக்கும் சுற்றுகள் மூலம், மூன்றுப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தற்போது வரை, சுஷாந்திக்கா, ஸ்ரீஹரி, மற்றும் சபேஷன் ஆகிய மூவரும் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.

நான்காவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்வதற்காக, இந்த வாரம் 'One & One' சுற்று நடைபெற உள்ளது. இதில் இன்னும் 7 போட்டியாளர்கள் தங்கள் திறமையைக் காட்ட இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில், மிகவும் திறமையாகப் பாடிய போட்டியாளர்களாக அருண் மற்றும் சீனு ஆகியோர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த இருவரில் ஒருவர் இறுதி சுற்றுக்குப் பிரத்தியேகமாகத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'சரிகமப சீனியர்ஸ்' நிகழ்ச்சி வெறும் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் மேடையாக மட்டுமல்லாமல், பல புதிய திறமைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள், நிகழ்ச்சியின் மூலமாகவே திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மூலமாகக் கிடைத்தப் பாராட்டுகள் பலருக்குத் திரையுலக வாசலைத் திறந்து விட்டுள்ளன.

SaReGaMaPa Zee Tamil

மறக்க முடியாத தருணங்கள்

நடுவர்களின் உணர்வுப்பூர்வமான கமெண்ட்கள், சில போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான பின்னணி கதைகள், மற்றும் மேடையில் நடக்கும் உற்சாகமூட்டும் நிகழ்வுகள் ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கியமானத் தருணங்களாக இருக்கின்றன. சரிகமப நிகழ்ச்சியில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இந்தச் சீசனில், தேவயானி மகளா அல்லது பவித்ராவா அடுத்த இறுதி போட்டியாளர் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அருண் மற்றும் சீனுவின் உணர்ச்சிப்பூர்வமான பாடல் மூலம், அடுத்த இறுதிச் சுற்றுக்கு யார் வருவார் என்ற ஆவல் உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் இந்த இறுதி போட்டிக்கு யாரை தேர்வு செய்வதென்று யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் தங்களுடைய அனைத்து திறமைகளையும் காட்டுகிறார்கள். இதில் எந்த போட்டியாளர்களின் பாடல்களிலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நடுவர்களே திகைத்து இருக்கிறார்கள்.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.