கழிவறையில் சத்தமின்றி குழந்தையை பெற்றெடுத்த பெண்” காதலியாய் மாறிய கொழுந்தியா செய்த கொடூரம்..

 


கேரளாவின் கொல்லம் மாவட்டம் கல்வாதுக்கல் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூரமான சம்பவம், இன்று வரை பலரின் இதயங்களை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

பிறந்தவுடன் குப்பை குழியில் வீசப்பட்ட குழந்தையின் சோகமான மரணம், அதனைத் தொடர்ந்து இரு இளம் பெண்களின் தற்கொலை, போலி பேஸ்புக் காதலன் என்ற மர்மம் – இவையெல்லாம் கலந்து உருவான இந்த வழக்கு, சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இப்போது, இந்த வழக்கின் இறுதி முடிவு வெளியாகியுள்ளது. ரேஷ்மா (இப்போது 25 வயது) குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோகக் கதையின் முழு விவரங்களை, உணர்ச்சிகளுடன் விரிவாகப் பார்ப்போம்!

2021 ஜனவரி 4-ஆம் தேதி இரவு 9 மணி. கொல்லம் மாவட்டம் கல்வாதுக்கல் ஈழாய்கோடு பேழுவிளா வீட்டில் வசித்து வந்த ரேஷ்மா, வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறையில் ரகசியமாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கர்ப்பிணியாக இருந்ததை குடும்பத்தினரிடம் (கணவர் விஷ்ணு உட்பட) நூதனமாக மறைத்தார் ரேஷ்மா, தொளதொளவென்று இருக்கும் தளர்வான ஆடைகளை அணிவது, ஆன்லைனில் விற்கக்கூடிய வயிற்றுபகுதியை ஒல்லியாக காட்டும் பிரத்யேக பெல்ட்டுகளை வாங்கி வயிற்றை இறுக்கமாக கட்டிக்கொள்வது என அந்த உயிர் வயிற்றில் இருக்கும் போதே பல கொடுமைகளை செய்துள்ளார் ரேஷ்மா.



இரவு நேரம் கணவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது, வழக்கமாக கழிவறைக்கு செல்வது போல சென்ற ரேஷ்மா அந்த கழிவரையிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.

பிறந்த குழந்தையை உடனடியாக அருகிலுள்ள ரப்பர் தோப்பில் குவிந்து கிடந்த குப்பை குழியில் வீசினார். குழந்தையின் அழுகை கேட்டு, ரேஷ்மாவின் தாயார் சந்தேகப்பட்டார், என்ன சத்தம் என கேட்ட போது.. அது பூனைகுட்டிமா என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சமாளித்திருக்கிறார் இந்த மிருகம் ரேஷ்மா.

அடுத்த நாள் காலை வரை அந்த அழுகை சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டதும், அந்த பகுதி மக்கள் என்ன என்று சென்று பார்த்தபோது குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தை, கொல்லம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் திருவனந்தபுரம் SAT மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், அன்று மாலையே அந்த அப்பாவி உயிரிழந்தது. காரணம், குழந்தையின் மூக்கில் தூசிகள் மற்றும் எறும்புகள் உள்ளே சென்று மூச்சுக்குழாயை அடித்திருக்கின்றன. இந்த சம்பவம், கிராமத்தையும், கேரளாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது!

இருங்க.. இந்த கொடூரத்தை தாண்டி அடுத்த கொடூரங்கள் தான் இன்னும் நம்மை நடுங்க வைக்கின்றன.

விசாரணையில் வெளியான உண்மை, அனைவரையும் திகைக்க வைத்தது. ரேஷ்மா, பேஸ்புக்கில் 'அனந்து' என்ற ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு அவருடைய மெசேஜ் மூலம் மட்டுமே காதலை வளர்த்து வந்தார். தொலைபேசி உரையாடலோ, வீடியோ உரையாடலோ இல்லை. வெறும் பேஸ்புக் மெசேஜ்ஜில் மட்டுமே அனந்து-வுடன் காதலை வளர்த்து வந்தார்.

அந்த காதலன், " நான் உன்னை சந்திக்கும் முன்பே முதல் குழந்தைக்கு தாயாகி விட்டாய். உன் முதல் குழந்தையை உன்னோடு நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், உன்னுடைய இரண்டாவது குழந்தையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறியதால், ரேஷ்மா கர்ப்பத்தை மறைத்து, குழந்தையை தீர்த்துகட்டும் முடிவுக்கு வந்தார்.

இங்கு தான் உலகை அதிர வைக்கும் உண்மை வெளியானது. தன்னுடைய காதலன் என்று ரேஷ்மா நம்பி பேசி அந்த அனந்து-வின் பேஸ்புக் கணக்கு போலியானது. உண்மையில் அந்த கணக்கு மூலம் ரேஷ்மாவிடம் பேசிவந்தது ரேஷ்மாவின் கொழுந்தியா ஆர்யா (ரேஷ்மா கணவர் சகோதரனின் மனைவி) மற்றும் கிரீஷ்மா (ரேஷ்மாவின் அக்கா மகள்)!

இதை ப்ராங் என்று நினைத்து செய்துள்ளார்கள் இந்த இரண்டு ஜென்மங்களும். ஒரு வருடமாக ப்ராங் செய்தார்களா..? நம்ப முடியவில்லை என்று போலீஸ் ஆர்யா மற்றும் கிரீஷ்மாவை நெருங்கியது.போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் ஆர்யாவும் கிரீஷ்மாவும். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இருவரும் காணாமல் போனார்கள். பின்னர், இத்திக்கரா ஆற்றில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

விசாரணையில், இது தற்கொலை என்று உறுதிப்படுத்தப்பட்டது. எதற்காக, ரேஷ்மாவிடம் இப்படி நடந்து கொண்டார்கள்..? நிஜமாகவே விளையாட்டுக்காக, பிராங் என்ற மனநிலையில் செய்தார்களா..? அல்லது பின்னால் வேறு ஏதேனும் மர்மம் இருக்குமா..? உண்மை என்ன..? என்று உலகிற்கு தெரியும் முன்பே அந்த உண்மை அவர்களோடு சேர்ந்து மரணித்து விட்டது.

2021 ஜூன் 22-ஆம் தேதி, DNA சோதனை மூலம் குழந்தை ரேஷ்மாவுடையது என உறுதிப்படுத்தப்பட்டதும், அவர் கைது செய்யப்பட்டார். ரேஷ்மாவின் கணவர் விஷ்ணு அபுதாபியில் இருந்து திரும்பி வந்து குவாரன்டைனில் இருந்தார்; அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

ரேஷ்மா, "நான் பிரசவிக்கவில்லை" என்று மறுத்தார். அவரது உறவினர்களும் அறிக்கைகளை மாற்றினர். ஆனால், DNA தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் ரேஷ்மாவை குற்றவாளியாகக் காட்டின. வழக்கில் கருதிக்கூட்டிய கொலை, நவஜாத குழந்தையை உபேக்ஷித்தல், தடயங்களை அழித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.வழக்கு கொல்லம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2024 மே மாதம், விசாரணை முடிவடைந்து.

2024 ஆகஸ்ட் 6-ஆம் தேதி, கொல்லம் நீதிமன்றம் ரேஷ்மாவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. திட்டமிட்ட கொலைக்கு (premeditated murder) 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடுதலாக, குழந்தையை உபேக்ஷித்த குற்றத்துக்கு 1 ஆண்டு கடுமையான சிறை. இந்த இரு தண்டனைகளும் ஒரே சமயத்தில் அனுபவிக்கலாம் (concurrent) என்று உத்தரவிடப்பட்டது.

ரேஷ்மா ஏற்கனவே கஸ்டடியில் கழித்த காலம், இந்த தண்டனையில் இருந்து கழிக்கப்படும். இந்த தீர்ப்பு, வழக்கின் முடிவை அறிவித்தாலும், ரேஷ்மாவின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு, சமூக வலைதளங்களின் ஆபத்துகளை வெளிப்படுத்தியது. ஒரு சாதாரண கேலி, மூன்று உயிர்களைப் பறித்தது. ரேஷ்மாவின் குடும்பம் உடைந்தது; விஷ்ணு மற்றும் அவர்களின் 3 வயது மகள், இந்த வலியை சுமக்கின்றனர்.

ஆர்யா மற்றும் கிரீஷ்மாவின் குடும்பங்களும் துயரத்தில் ஆழ்ந்தன. இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் நுட்பத்தையும், போலி அடையாளங்களின் ஆபத்தையும் நமக்கு உணர்த்துகிறது. தீர்ப்பு வந்தாலும், இழந்த உயிர்களை திரும்பக் கொண்டு வர முடியாது – இது ஒரு எச்சரிக்கை!

இந்த வழக்கு தொடர்பான மேலும் அப்டேட்கள் இருந்தால், அவை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடர்பானவையாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலவரப்படி, ரேஷ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதே இறுதி முடிவு. இந்த சோகம், நம்மை சிந்திக்க வைக்கட்டும்!


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.