எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

தாய் நாட்டை விட்டு ஆடம்பர வாழ்வுக்காக உயிரை பணயம் வைத்து ஓடும் புலம்பெயர் அகதிகளுக்கு லண்டன் பிரதமர் வைத்த ஆப்பு

 பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சுரண்டலைக் குறைக்கவும், நியாயமான அமைப்பை உருவாக்கவும் கடினமான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அகதி அந்தஸ்தை தற்காலிகமாக்குவதாகவும், சட்டவிரோத வருகையாளர்களை நாடு கடத்துவதை விரைவுபடுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதாக அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.

குடியேற்ற நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தொழிற்கட்சி அரசாங்கம் நவீன காலங்களில் மிகவும் விரிவான புகலிடக் கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதில் அகதிகள் நிரந்தரமாக குடியேறுவதற்கான காத்திருப்பு காலத்தை நான்கு மடங்கு உயர்த்தி 20 ஆண்டுகளாக அதிகரித்துள்ளமையும் அடங்கும்.

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் குற்றவாளிகள் திரும்புவதை ஏற்காவிட்டால், அங்கோலா, நமீபியா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் யார் வாழலாம் என்பதில் அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக, மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாடு (ECHR) பிரித்தானிய நீதிமன்றங்கள் விளக்கும் விதத்தில் மாற்றங்களை உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் முன்மொழிந்துள்ளார்.

இந்த முன்மொழிவுகளின் கீழ், குடும்ப வாழ்க்கைக்கான உரிமையை நிர்வகிக்கும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாடு பிரிவு எட்டின் விளக்கத்தை அரசாங்கம் மாற்ற விரும்புகிறது.

இது குடும்ப உறவுகள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் போன்ற உடனடி குடும்பத்தைக் குறிக்கின்றன என்பதை தெளிவுபடுத்துவதுடன், பிரித்தானியாவில் தங்குவதற்கு உறவுகளைப் பயன்படுத்துவதை தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் மார்ச் மாத இறுதி வரையிலான காலப்பகுதியில், 109,343 பேர் இங்கிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளனர், இது முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்திய மாதங்களில் வாக்காளர்களுக்கு குடியேற்றம் மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.