சிலாபம்,மரவல பகுதியில் பமோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமையானது கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






