கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டியவில் தெருநாய் ஒன்றை காரால் மோதி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான பெண் வேண்டுமென்று தனது காரில் தெருநாயை மோதிக் கொலை செய்தமையை சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
