படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் உடல் மிதிகமவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது, 'நான் வரும் வரை உயிரை பிடித்து வைத்து இருந்திருக்கலாமே, தயவு செய்து என்னிடம் ஒருமுறை பேசுங்கள்' என அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளன.
