திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்சினையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பெண், தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சுரேஷ் வீட்டின் முன் உடல்களை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.