மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந்தையை இன்றையதினம் தொழிற் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த பேருந்து ஒன்று பின்திசை நோக்கி நகர்ந்தபோது, அதன் சில்லுக்குள் அகப்பட்டு குழந்தை உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஆரையம்பதி முதலாம் பிரிவு - காளிக்கோவில் வீதியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் சடலம் ஆரையம்பதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்