இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தாக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் "ஓபரேசன் ரைசிங் லயன்" (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தாக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் "ஓபரேசன் ரைசிங் லயன்" (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சர்வதேச அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் இஸ்ஃபஹானில் உள்ள யுரேனியம் மாற்று வசதி (Uranium Conversion Facility) மற்றும் எரிபொருள் தகடு உற்பத்தி ஆலை உள்ளிட்ட முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் சில அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதில் ஈரானின் முதன்மை இராணுவ தலைவர்கள் மற்றும் அணு ஆயுத விஞ்ஞானிகள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் முன்னதாக வெளியாகியிருந்தன.
ஈரான் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியமையும், இதில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் உள்ளிட்ட பகுதிகள் இலக்காக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.