வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 15 லீட்டர் கசிப்பு மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார்.
புதன்கிழமை துன்னாலைப் பகுதியில் காங்கேசந்துறை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினர் திடீர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது துன்னாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கசிப்பினை எடுத்துச் சென்ற ஒருவரை மறிக்க முற்பட்ட போது காசிப்பு காலனினை வீசிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.
மீட்க்கப்பட்ட கலனில் இருந்து 15 லீட்டர் கசிப்பினையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.