இடுகைகள்

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு சோகத்தில் குடும்பம்

 


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார்.


   மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார்.

கடலுக்கு சென்றவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார். ஆனால் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளை , கடலில் அவரது கட்டுமரம் மாத்திரம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.


அதனை மீட்டு கரை சேர்த்த தொழிலாளிகள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது

அதேவேளை , சட்டவிரோத கடலட்டை தொழில் செய்பவர்களின் படகு கட்டுமரத்தில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.