கனடாவில் வேலை செய்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!


எதிர்வருகின்ற ஜூலை மாதம் முதல், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிக உதவிக் கொடுப்பனவுகளை வழங்க கனடா தொழிலாளர் நலத்திட்டம் தீர்மானித்துள்ளது.

ஜூலை 12ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்பட்டு பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

ஜூலை மாதத்தின் பின்னர் அடுத்த கொடுப்பனவு திகதிகள், ஒக்டோபர் 11 மற்றும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆகும்.

2024ஆம் ஆண்டில் ஏற்கனவே இந்த நன்மையை பெற்றோர், மீண்டும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இதற்கமைய, ஒற்றைத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 1,633 டொலர்கள் வரையான கொடுப்பனவையும் குடும்பங்கள் ஆண்டுக்கு 2,813 டொலர்கள் வரையான கொடுப்பனவையும் பெறுவர்.

அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 843 டொலர்கள் வழங்கப்படும்.

இந்த பலனைப் பெறுவதற்கு நீங்கள் ஆண்டு முழுவதும் கனடாவில் வசிப்பவர்களை இருக்க வேண்டும் என்பதோடு கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் உங்களுக்கு 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அத்துடன், 2024ஆம் ஆண்டு நீங்கள் வேலை செய்து குறைந்தது 3,000 டொலர்கள் வரை சம்பாதிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குறித்த உதவிக் கொடுப்பனவு தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

வரம்பை விட அதிகமான வருமானத்தை பெறுவோரின் கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் அல்லது முற்றாக நிறுத்தப்படலாம்.

உங்கள் பணம் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், 10 வேலை நாட்கள் காத்திருந்து, பின்னர் கனடா வருவாய் நிறுவனத்தை(CRA) தொடர்பு கொள்ளவும்.

இதேவேளை, கொடுப்பனவை பெறுபவர்களின் வரி வருமானம் முழுமையாக உள்ளதா என்பதையும் தகவல் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.