புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை வனாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவர் என்றும், அவர் சாரதியாக பணிபுரிவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகளின் போது குறித்த சந்தேக நபர் சிறுமியின் தாயின் காதலன் என்பதும் தெரியவந்துள்ளது.
தனது தாய் வீட்டில் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோதும் சந்தேக நபர் தன்னைத் துன்புறுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தன்னை முதலில் பாலியல் வன்கொடுமை செய்த திகதி குறித்து தனக்கு தெளிவான நினைவில் இல்லை என்றும், குற்றவாளி 2023 முதல் தன்னை இவ்வாறு துன்புறுத்தி வருவதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.