80 வயது மூதாட்டிக்கு மது போதையில் 4 பேர் கூட்டாக செய்த கொடூரம்! வெளியான பரபரப்பு தகவல்


பண்ருட்டி அருகே மது போதையில் 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த, 4 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு, அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர், மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவர் அணிந்திருந்த 4 கிராம் கம்மல், 2 கிராம் மூக்குத்தியை பறித்துச் சென்றனர்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள், அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவகல்லுாரியில் சேர்த்தனர். பண்ருட்டி பொலிஸார் நடத்திய விசாரணையில், 35வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க 4 பேர், குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. 

மூதாட்டியின் பாலியல் பலாத்கார சம்பவம் கிராமத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.