நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.
கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலும், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவைகள் இன்று முதல் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.