யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது
புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானாது 155 ஆண்டுகளை நிறைவு பெற்றவுடன் இந்த மறை மிக ஆன்மீக ரீதியில் மிக சிறப்பாக இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது
கொடியேற்றம் ஆனது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி பின்னர் திருச்செபமாலையுடன் மாலை 6மணியளவில் திருப்பலி அருட்தந்தை அமிர்தராஜ் அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது
இவ் நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை பங்கு மக்கள் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்