பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில், தம்பியை அரிவாளால் கொடூரமாகப் பலமுறை வெட்டி காயப்படுத்திய அவரது அண்ணாவை, ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நுஜித் டி சில்வா, புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.
இந்த மோதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களையும், பதுளை வைத்தியசாலையில் பதுளை பொலிஸார் அனுமதித்தனர்.
பதுளை நீதவான், வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பரிசோதித்த பின்னர், விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதுவரை பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர், பின்னர் பதுளை சிறைச்சாலை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார்.