உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியானது 45 இலட்சத்து 3 ஆயிரத்து 930 வாக்குகளையும் 3 ஆயிரத்து 927 உறுப்பினர்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 22 இலட்சத்து 58 ஆயிரத்து 480 வாக்குகளையும் ஆயிரத்து 767 உறுப்பினர்களையும் பெற்று இரண்டாவது நிலையில் உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 9 இலட்சத்து 54 ஆயிரத்து 517 வாக்குகளையும் 742 உறுப்பினர்களையும் பெற்று மூன்றாவது நிலையில் உள்ளது.