சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை சபையியிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபை அமர்வுகளை குழப்பும் வகையில் ஒழுங்குப் பிரச்சினை என கோரி அவர் குழப்பம் விளைவிப்பதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.