கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் நாடாளுமன்றில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் என கூறினார்.
அத்துடன் பலருக்கு முன்பாக மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று 5 மாதங்கள் கடந்துள்ள போதிலும் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.