அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.' என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு, சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.