கொட்டாவ, மாலபல்ல பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் களுத்துறை - எதனமடல பிரதேசத்தில் பாதாளக்குழு தலைவர் சமயங் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவத்தின் 8 ஆவது பிரதிவாதி எனத் தெரியவந்துள்ளது.
உடவலவ பிரதேசத்தில் நால்வர் கொல்லப்பட்டமை தொடர்பில் உயிரிழந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவ - மாலபல்ல - விகாரை வீதியில் நேற்று இரவு 8 மணிக்கு உந்துருளியில் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.