கோசல நுவன் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து, வெற்றிடமாக இருந்த கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்துக்கு, தேசிய மக்கள் கட்சியின் சமந்த ரணசிங்க பதவியேற்றுள்ளார்.
இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வின் போதே சமந்த ரணசிங்க, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.