திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு

 திருகோணலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருவில பகுதியில் வைத்து நபர் ஒருவர் மீது கட்டுத்துவக்கினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 46 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளதோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்து விட்டு சந்தேக நபர் தப்பித்துச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

முன் பகை காரணமாக சேருவில பகுதியில் வைத்து நபரொருவர் மீது கட்டுத் துவக்கினால் சூடு நடத்திய நபர் மீண்டும் நூறு வீட்டுத் திட்டம் பகுதிக்குசென்று  ஏனைய இருவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து விட்டுச் தப்பித்துச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இணங்கண்டுள்ளார்.

எனினும் அவர் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் சேருநுவர பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிதித்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.