தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் மூவாயிரம் நாள்களை எட்டியுள்ள நிலையில் கவனவீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இறுதிப் போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் மூவாயிரம் நாள்களைக் கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து, அவர்களால் கவனவீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கக் கொடிகளை ஏந்தியிருந்ததமையுடன், தங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.