தெற்கு சூடானில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது எனத் தகவல் வெளியாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.