சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் இன்று (05) சமனலவெவ காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த 4 சந்தேகநபர்களான மாணவர்களும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாணவனின் மரணம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரும், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.