நாடாளுமன்றத்தின் பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்களுக்கான பல கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில், உணவுச் செலவுகளை ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது நியாயமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான மாதாந்த உணவுக் கட்டணம் இதுவரை 1000 ரூபாயாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவின்படி, பொது ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.