வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிப்பதற்கு 310 படகுகளுக்கு அனுமதி

 

''யாழ்.  மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில், 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.''

- இவ்வாறு வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

''யாழ்.  மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில், 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன.

ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக் கொண்டு வந்த என்.பி.பி.  310 படகுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன.

அனுமதிக்கு மேலான 300 படகுகளுக்கும் லஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிக்கான படகுகள் தரித்து விடப்பட்டுள்ளன.

 தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதியளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்து கொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது.

நாடாளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை.

உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும். இனி மேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரசினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விடின் எதிர் காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.

தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்குள்ளவர்களை வழிக்கு பொண்டுவர முடியும்.

அரசு காணி சவீகரிப்பு தொடரபில் வர்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக் காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையா வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீக்க் காணிகள் இவை.

யுத்தம் காரணமாக வேறு காரணங்களால் மக்கள் குறத்த பகுதகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர், பலர் வேறு பகுதகளில் வசித்து வரும் நிலையில் இக் காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கறோம் .'' - என்றார். 


கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.