கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் பதிவாகி உள்ளது.
குறித்த சம்பவமானது பூநகரி, முழங்காவிலில் உள்ள இரணைமாதாநகர் என்ற குடியேற்றத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யாகப்பர் மரியஜான்சன் என்ற இளையரின் மரணமே இப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இவ் இளைஞர் நேற்று (15) மாலை தனது சகோதரர்களுடன் படகில் தொழில் நிமித்தமாக கடலுக்குச் சொன்றுள்ளார். தொழிலில் ஈடுபட்ட இளைஞர் அட்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். குதித்த இளைஞன் மீண்டும் மேலே வராத காரணத்தால் படகில் சென்ற மரிய ஜான்சன் என்ற 24 வயதுடைய சகோதரரை ஏனைய சகோதரர்கள் கடலில் தேடியுள்ளனர்.
கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உயிரற்ற உடல் (16) இன்று பத்து மணியளவில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முழங்காவில் மருத்துவமனையில் வைக்கப்பட்டு தற்போது கிளிநொச்சி மருத்துவமனைக்கு இளைஞரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.