இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் இன்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடையில், அவ்வப்போது மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் கொழும்பு – காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.