மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதத்திற்கும், தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே மற்றவர்களிடம் அடங்கி போகும் தன்மை அற்றவர்களாக இருப்பார்கள்.
இதனால் தங்களின் தவறுகரள மற்றவர்களிடம் ஒத்துக்கொண்டால் இவர்களுக்கு பணிந்துபோக வேண்டியிருகப்கும் என ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்கள் யாரிடடும் மன்னிப்பு கேட்பதை ஒருபோதும் விரும்புவது கிடையாது. எனவே இவர்களை திருத்துவது இயலாத காரியம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் மன உறுதிக்கும், பிடிவாத குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களை சொல்வதையும் செய்வதையும் சரி என நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்துவிட்டாலும் கூட அதை மற்றவர்களிடம் ஒரு பொதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே கம்பீரமான தோற்றமும், தற்பெருமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பிறப்பிலேயே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையுடன் இருப்பதால், இவர்கள் தங்களின் பெருமையை இழப்பதையோ அல்லது தவறு செய்தவர்களாக தோன்றுவதையோ எந்த நிலையிலும் விரும்புவது கிடையாது.
இவர்களின் இந்த குணம் இவர்களின் தவறுகளை ஒத்துக்கொள்ள ஒருபோதும் இடமளிக்காது.