முகமாலையில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்
படுக்கையில் சடலமாக
04.04.2025 இன்று காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தார் வேறு இடம் ஒன்றில் வசித்துவரும் நிலையில் தனிமையில் வசித்து வந்த
குணபாலசிங்கம் பென்சமின்போல்
என்னும் முச்சக்கர வண்டி சாரதியே சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை
பளை பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்.