கொழும்பில் பேரூந்தில் மோதி உயிரிழந்தவர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்..!

 

கொழும்பு - கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

பேருந்தில் மோதி உயிரிழந்த குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு கோட்டை பொலிஸார் இவ்வாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.


இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இது தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கோட்டை பொலிஸ் நிலையத்தின் 071 8591555 அல்லது 011 2323677 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.